விஜய் சேதுபதியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள் – இதுதான் காரணமா??

0

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 10 படங்கள் வரை நடித்து வருபவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போது இவர் பேசிய கருத்திற்கு நெட்டிசன்கள் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

விஜய் சேத்துபதி:

தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பு மூலம் மக்கள் மனதில் குடியேறியவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தேர்வு செய்யும் கதைகள் அனைத்தும் தனித்தன்மையை பெற்றிருக்கும். மேலும் பல புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து வருகிறார் விஜய் சேத்துபதி. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 10 படங்கள் வரை விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவருக்கு ஓர் கதை பிடித்திருந்தால் போதுமாம் உடனே கால்ஷீட்டை கொடுத்து விடுவாராம். இவர் தற்போது சினிமாவை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளாராம். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு பணத்தாசை வந்துவிட்டது என்று அனைவரும் கூறி வந்த நிலையில் இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், எனக்கு பணத்தாசை இல்லை மக்களை சந்தோஷப்படுத்த ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்தார்.

தாய் மடியில் தலைவைத்து தூங்கும் புகழ் – வைரலாகும் குக் வித் கோமாளி நினைவுகள்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதற்கு நெட்டிசன்கள் பல வகையில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் கூறியதாவது, பணத்தாசை இல்லை என்றால் மக்களுக்காக இலவசமாக நடிக்கலாமே எதுக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி வாங்குறீங்க என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு விஜய் சேதுபதி தற்போது வரை தனது வாயை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here