தடையை மீறி ஓடிய வாரிசு, துணிவு படத்தின் சிறப்பு காட்சிகள்.., விளக்கம் கேட்டு திரையரங்குகளுக்கு நோட்டீஸ் விட்ட அரசாங்கம்!!

0
தடையை மீறி ஓடிய வாரிசு, துணிவு படத்தின் சிறப்பு காட்சிகள்.., விளக்கம் கேட்டு திரையரங்குகளுக்கு நோட்டீஸ் விட்ட அரசாங்கம்!!
தடையை மீறி ஓடிய வாரிசு, துணிவு படத்தின் சிறப்பு காட்சிகள்.., விளக்கம் கேட்டு திரையரங்குகளுக்கு நோட்டீஸ் விட்ட அரசாங்கம்!!

நடிகர் விஜய் மற்றும் அஜித்குமார் நடித்த வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்பு காட்சி குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

வாரிசு – துணிவு:

தமிழ் திரையுலகில் எண்ணற்ற ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் தான் நடிகர் விஜய் மற்றும் அஜித். தற்போது பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷலாக தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் ஜனவரி 11ம் தேதி படு பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகி இருந்தது. மேலும் இந்த இரண்டு படங்களுக்குமே மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்ததால், படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் படு சூடாக நடக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி நேற்று சினிமா பிரபலங்கள் பலரும் படத்தை கண்டு பேட்டி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களுக்கு ஜனவரி 13,14 மற்றும் 15 சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும், உயர்ந்த கட் அவுட் மற்றும் பாலாபிஷேகம் போன்றவை செய்ய கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

விஜய் டிவி சீரியலில் முக்கிய பிரபலம் என்ட்ரி., இனி இவர்தான் ஹீரோவா? வெளியான அப்டேட்!!

இந்நிலையில் வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்பு காட்சி குறித்து சோசியல் மீடியாவில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சிறப்பு காட்சிகள் ரத்து செய்ய அரசாங்கம் உத்தரவிட்ட நிலையில் திரையரங்கில் இன்று சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பாகி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிறப்பு காட்சிகள் ஒட்டிய தியேட்டர்களிடம் விளக்கம் கேட்டு அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here