Saturday, April 27, 2024

பீட்டர் பாலை விட்டு பிரிந்தது வேதனையாக உள்ளது – சோகத்தில் வனிதா.., ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

Must Read

நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் வேதனையாக இருப்பதாக தெரிவித்துள்ளார், அவரது பதிவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவு மற்றும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் போட்டியாளர்:

தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்தவர் நடிகை வனிதா விஜயகுமார். பின், சினிமாவிற்கு முழுக்கு போட்ட அவர், தனது வாழ்க்கையினை கவனிக்க சென்று விட்டார். பல ஆண்டுகளுக்கு பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” போட்டியில் பங்கேற்று பலரது கவனத்தையும் பெற்றார். பிக் பாஸ் வீட்டில் அவர் அதிகமாக கவனம் பெற்றதற்கு காரணம் அவரது குணம் தான். அந்த வீட்டில் அனைவரையும் மிரட்டிக்கொண்டு இருந்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பின், பல சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு பீட்டர் பால் என்பவர் மீது காதல் வந்து அவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

பலரும் பீட்டர் பாலை திருமணம் செய்ய வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தினர். ஆனால், எதனையும் காதில் வாங்காமல் அவரை திருமணம் செய்து கொண்டார்.

சோகமான ட்வீட்:

திருமணம் முடிந்த சில மாதங்களில் பீட்டர் பால் அதிகமாக குடிக்கிறார் என்று அவரை விட்டு தற்போது பிரித்துள்ளார். தான் காதலில் எவ்வளவு பெரிய துரதிஷ்டசாலி என்பதை ஒரு வீடியோவில் கண்ணீருடன் தெரிவித்தார். பலர் கேலி கிண்டல் செய்தாலும் சிலர் அவருக்கு ஆறுதல் சொல்லி வந்தனர். இந்த நிலையில் அவரது கணவரான பீட்டர் பால் குடித்து விட்டு யாருடைய ஆதரவும் இன்றி வீதிகளில் அலைந்து வருகின்றார் என்ற செய்தியும் வெளி வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியான நிலையில் அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் “Growing up isn’t easy..painful..but worth it” என்று பதிவிட்டுள்ளார். அதாவது வளர்வது கடினமான ஒன்று தான்..அதே போல் அது வலி நிறைந்த ஒன்றும் தான்..ஆனால், அதற்கு மதிப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் தங்களது ஆறுதலை வனிதாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களவை தேர்தலில் வாக்களிக்க வந்த 7 பேர் உயிரிழப்பு., இதுதான் காரணம்? பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!!

நாடு முழுவதும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளிலும், கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று (ஏப்ரல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -