இசைப்புயலுடன் வைகைப்புயல்….,ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ரெடி…,

0
இசைப்புயலுடன் வைகைப்புயல்....,ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ரெடி...,
இசைப்புயலுடன் வைகைப்புயல்....,ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ரெடி...,

இந்திய இசைத்துறையில் தவிர்க்க முடியாத ஓர் இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் தான். கோலிவுட் துவக்கி பாலிவுட் வரைக்கும் தனது இசையால் மக்களை கவர்ந்து வைத்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலகமெங்கும் பயணம் மேற்கொண்டு கான்செர்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில், வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதியன்று ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை ECR பகுதியில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் வைகைப்புயல் வடிவேலு பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கங்கனாவின் மாஸ் நடிப்பில் ‘எமர்ஜென்சி’…,நவம்பர் 24 இல் ரிலீஸ்…,

இது குறித்து வடிவேலு கூறுகையில், ‘ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் பாட இருக்கிறேன். இதற்காக அவர் எனக்கு 4 பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார். அந்த பாடல்களை 4 அல்லது 5 நாட்களுக்கு பயிற்சி மேற்கொண்டு பின்னர் நிகழ்ச்சியில் பாட இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாக இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஒரு பாடலைப் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here