தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் திரைப்படமான ‘நாயகன்’ வெளியாகி கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை.
இந்த படத்தில் நடிகை த்ரிஷா அல்லது நயன்தாராவை கமலுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் எழுந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இப்போது, ‘நாயகன்’ திரைப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் மணிரத்னத்துடன் கை கோர்க்கும் இந்த திரைப்படம் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
இசைப்புயலுடன் வைகைப்புயல்….,ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ரெடி…,
தற்போது ‘KAMAL234’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது 48 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது குறிப்பிடத்தக்கது.