உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை துவங்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
75 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி:
உத்திரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு அம்மாநிலத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள 75 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிதாக கல்லூரிகளை உருவாக்கவும், ஏற்கனவே இருக்கும் மருத்துவக்கல்லூரிகளை புதுப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‘கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும்’ – ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்!!
இதற்காக மருத்துவக் கல்லூரி இல்லாத 16 மாவட்டங்களில் தனியார் உதவியுடன் புதிதாக மருத்துவக் கல்லூரிகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாவட்டங்களில் அவை மேம்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து உத்திரபிரதேச அரசின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘மாநிலத்தின் கடைநிலை வரை மருத்துவ வசதிகளை பலப்படுத்த அரசு விரும்புகிறது’ என கூறினார். மேலும் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை அரசு அதிகப்படுத்த உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.