தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் – ராகுல் காந்தி பிப்ரவரி 27ல் தென் மாவட்டங்களுக்கு விசிட்!!

0

தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளார். தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய வர உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல்

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் கட்சிகள் அனைத்தும் இறங்கியுள்ளது. கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தங்களது முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை தேர்ந்தெடுத்துள்ளது.

‘ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு மருத்துவக் கல்லூரி’ – முதல்வர் திட்டம்!!

கூடுதலாக, அரசியல் வட்டாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் விதமாக சசிகலா விடுதலையாகி வந்துள்ளார். இது ஒரு பக்கம் இருந்தாலும் திமுக இந்த முறை ஆட்சியினை பிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகின்றது. இதற்காக நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

Image result for rahul gandhi

இந்த கட்சிகளின் நிலை இப்படியாக இருக்கிறது என்றால், தேசிய கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தங்களது பங்களிப்பினை உறுதி செய்ய போராடி வருகின்றது. அதில் ஒரு பகுதியாக அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக, தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தேனி, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வருகை புரிய உள்ளார். வரும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் இந்த மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here