அமெரிக்காவில் கறுப்பின இளைஞன் உயிரிழந்ததால் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அமரிக்கா
அமெரிக்காவில் மின்னபொலிஸ் நகரில் உள்ள கறுப்பினத்தை சேர்ந்த 45 வயது இளைஞன் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸாரின் விசாரணையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் பல மாகாணங்களில் போராட்டத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மின்னபொலிஸ் உள்ள ஹென்னெபின் கவுண்டி மருத்துவ பரிசோதகர் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டுள்ளர். அதில் 46 வயதான, ஜார்ஜ் சட்ட அமலாக்க அடக்குமுறையாலும், அவரது கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டு இதயம் செயழிந்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
ஜார்ஜின் பிற உடல்நிலை குறித்த தகவல்களில், தமனி பெருங்குடல் மற்றும் உயர் இரத்த அழுத்த இதய நோய் உள்ளதாகவும், சமீபத்தில் ஃபெண்டானில்; மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பிளாய்டு மரணத்திற்கு நியாயம் கேட்டு மின்னபொலிஸ் மற்றும் அமெரிக்காவை சுற்றியுள்ள நகரங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன. கொலை செய்த போலீஸ் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |