பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஈஸ்வரி மற்றும் செழியன் இருவருக்கும் எழில் அமிர்தாவை திருமணம் செய்ய நினைப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் அமிர்தாவின் பெற்றோர்களிடம் கடுமையாக பேசி அவர்களை ஊரைவிட்டே போகும் படி செய்து விடுகிறார். இதனால் அமிர்தா குடும்பத்தில் உள்ள அனைவரும் ஊரை விட்டு கிளம்புகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
நடந்த விஷயங்களை எழில் பாக்கியாவிடம் சொல்லி கவலைப்படுகிறார். பாக்கியா, அமிர்தாவை நான் மருமகளாக ஏற்றுக் கொள்கிறேன். உங்க இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறார். இதனை தொடந்து பாக்கியா வீட்டில், எழில் திருமணத்தை வைத்து ஒரு பெரிய பூகம்பம் வரும் என தெரியவருகிறது. அதாவது பாக்கியாவுக்கு, அமிர்தா குடும்பத்திடம் ஈஸ்வரி நடந்து கொண்ட விஷயம் தெரியவருமாம்.
செம்பருத்தி புகழ் கார்த்திக் ராஜின் சொந்த மனைவியை பார்த்துள்ளீர்களா?? அழகிய புகைப்படம் வைரல்!!
பாக்கியா எதுக்கு அத்தை இப்படி செஞ்சீங்க என கேட்க எழிலுக்கு மனைவியா அமிர்தா வர கூடாது என சொல்வாராம். இதை கேட்டு ஆத்திரமடைந்த பாக்கியா எழில் என்னுடைய பிள்ளை, அவனுக்கு எது நல்லது என்று எனக்கு தெரியும் என ஈஸ்வரிடம் எதிர்த்து பேசுவாராம். எழில்-அமிர்தா திருமணத்தை வைத்தே குடும்பத்துக்குள் பல பிரச்சனைகள் வரலாம் என்று தான் தெரிகிறது.