விஷாலுக்கு ஏற்பட்ட கொடுமை.., இரவோடு இரவாக வச்சு செஞ்ச சம்பவம்.., வீட்டில் நடந்தது என்ன??

0
விஷாலுக்கு ஏற்பட்ட கொடுமை.., இரவோடு இரவாக வச்சு செஞ்ச சம்பவம்.., வீட்டில் நடந்தது என்ன??
விஷாலுக்கு ஏற்பட்ட கொடுமை.., இரவோடு இரவாக வச்சு செஞ்ச சம்பவம்.., வீட்டில் நடந்தது என்ன??

சென்னையில் உள்ள விஷால் வீட்டின் மீது முகம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதல், சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷால்

ஒரு காலத்தில் டாப் ஹீரோவாக இருந்து வந்த விஷால் தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி இவர் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான ஷூட்டிங் நடந்து கொண்டுள்ளது.

இந்த நேரத்தில் சென்னை அண்ணா நகரில் இருக்கும் விஷால் வீட்டின் மீது யாரோ முகம் தெரியாத மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவரது கார், வீட்டின் ஜன்னல் ஆகியவை சேதாரம் ஆகியது. இந்த சம்பவத்தின் போது விஷால் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ச்சா.., என்ன அழகுடா.., நிஜ இளவரசி போல் ஜொலிக்கும் அதிதி சங்கர்.., வைரல் போட்டோ உள்ளே!!

இதனால் விஷாலின் மேனேஜர் ஹரிகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிசிடிவி பதிவையும் சேர்த்து கொடுத்து மேனேஜர் விசாரிக்க சொல்லி இருக்கிறார். இதனால் இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த செயலை விஷாலால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர் தான் செய்திருப்பார்கள் என போலீசார்கள் சந்தேகப்படுகின்றனர்.

ஏனென்றால் விஷால் மீது பல புகார்கள் வருவதாகவும், அதை பற்றி அவரிடம் விசாரிக்க முடியவில்லை என போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளனர். அப்படியே அவரிடம் விசாரித்தாலும் சினிமா துறையில் உள்ள முக்கிய புள்ளிகளை காரணம் காட்டி தப்பித்து விடுகிறார் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செயலை யார் செய்தார்கள் என போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here