இந்தியாவில் நிலையான மற்றும் வலுவான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய மைல்கல்லை எட்டும் நோக்கில், முதல் முறையாக கொல்கத்தாவில் நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று (மார்ச் 6) தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை.., விண்ணப்பிக்க இது தான் முறை.., வெளியான அறிவிப்பு!!!
அதன்படி இந்த மெட்ரோ ரயில் ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரை, நீருக்கு அடியில் செல்லும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இரண்டு பரபரப்பான பகுதிகளை விரைவில் சென்றடைய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த ரயில் சேவை பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.