எதிர்நீச்சல் சீரியலில் ஒரு வழியாக தர்ஷினியை கடத்தி வைத்த கும்பலை போலீசார் கைது செய்கின்றனர். இன்னொரு பக்கம் தர்ஷினி காட்டுக்குள் வழி மாறி எங்கே போவதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் அந்த ரவுடிகள் குணசேகரனிடம் நாங்கள் போலீசில் சிக்கிக் கொண்டோம் என்று சொல்கின்றனர். உடனே குணசேகரன் உங்கள போலீஸ் அடிச்சு விசாரித்தாலும் குணசேகரன் தான் கடத்தியது என்று சொல்ல கூடாது என திட்டம் போட்டு கொடுக்கிறார்.
குணசேகரன் சூழ்ச்சி படி அந்த ரவுடிகளும் ஜீவானந்தம் தான் குழந்தையை கடத்த சொல்லியது என வாக்குமூலம் தருகின்றனர். இதை கேட்டு ஜனனி அதிர்ச்சியாகிறார். இந்த பக்கம் தர்ஷினியை துரத்திக் கொண்டு ஒரு நபர் வருகிறார். மேலும் அவர் தர்ஷினியை அரிவாள் கொண்டு வெட்டி கொலை செய்ய பார்க்கிறார். இந்த இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்துப் பார்க்கையில் நிச்சயம் தர்ஷினியை கடைசி நேரத்தில் ஜீவானந்தம் வந்து காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.