தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை.., விண்ணப்பிக்க இது தான் முறை.., வெளியான அறிவிப்பு!!!

0

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர தமிழக அரசு மாதந்தோறும் வேலை வாய்ப்புக்கான முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்க உள்ளனர்.

மஹா சிவராத்திரி எதிரொலி: இந்த 3 நாட்களுக்கும் சிறப்பு விரைவு பேருந்துகள்., TNSTC அறிவிப்பு!!!

அதே போன்று மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 600, மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 31ம் தேதிக்குள் தகுதியுடையோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சான்றிதழ்கள், அடையாள அட்டையை வைத்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here