சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை நிமித்தமாகவும், கல்வி ரீதியாகவும், பெரும்பாலானோர் சொந்த ஊர்களை விட்டு தங்கி வருகின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் (மார்ச் 8) மஹா சிவராத்திரி தினம் என்பதாலும், அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என வார இறுதி விடுமுறை தினங்களும் வர இருப்பதால், பெரும்பாலனோர் ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு 1,360 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் நடிகர் வடிவேலு போட்டி., திமுக கட்சி சார்பிலா? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு நாளை (மார்ச் 7) முதல் மார்ச் 9 வரை கூடுதலாக 1,090 பேருந்துகளும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு 270 கூடுதல் பேருந்துகள் என 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.