இந்தியாவில் மகளிர் பிரிமியர் லீக் தொடர் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய டெல்லி அணியில் பேட்ஸ்மேன்கள் அபாரமாக செயல்பட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பாக விளையாடி (69* ரன்கள்) அரைசதம் விளாசினார்.
இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் இறுதிக் கட்டத்தில் மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால் 20 ஓவரில் 163 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.