உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு காதல் ஜோடிகள் தங்கள் காதலை சோதிக்க நினைத்து 123 நாட்கள் ஒருவர் கையை ஒருவர் பிணைத்து கொண்டுள்ளனர். இந்த நாட்களில் தங்களின் சுதந்திரத்தை இழந்ததாக கருதி தற்போது பிரிந்து சென்று உள்ளனர்.
அன்பு என்பது அனைவரிடமும் உள்ளது தான். அதாவது பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் மீது உள்ள அன்பு,பிள்ளைகளுக்கு பெற்றோர் மீது உள்ள அன்பு, இப்படி அனைத்து உயிர்களுக்கும் அன்பு என்பது பொதுவான விஷயமே. அந்த அன்பின் பரிமாண வளர்ச்சியே காதல் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் மற்றொரு ஆண் அல்லது பெண் மீது கொண்டது எனலாம். உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரைச் சேர்ந்த விக்டோரியா புஸ்டோவிடோவாவும், அலெக்ஸாண்டர் குட்லேவும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்த இளம் ஜோடிகள் தங்களின் காதலை சோதிக்க நினைத்து ஒரு புதுவித சோதனையைச் செய்து கொண்டுள்ளனர்.அதாவது, இந்த காதல் புறாக்கள், தங்களின் கைகளை இணைக்க முடிவு செய்து, தங்களின் கைகளை ஒரு சங்கிலியை வைத்து பிணைத்துக் கொண்டு உள்ளனர். இந்த இணைப்பானது 123 நாட்கள் வரை தொடர்ந்து உள்ளது.
பின்னர் இருவரும் தங்களுக்கான தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டதாக உணர்ந்ததாக கூறி, அவர்களின் சங்கிலி இணைப்பை துண்டித்து, இனி நாங்கள் எங்கள் உறவில் பிரிவை எதிர்கொள்ள போகிறோம் என்று கூறி இருவரும் பிரிந்து இரு வேறு பாதைகளில் சென்று விட்டனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்