அசாம் மாநிலத்தில் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
முன்பு இருந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொற்று பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான மாநில அரசுகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த வண்ணம் உள்ளன. தற்போது அசாம் மாநில அரசும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து உள்ளது.
முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜூலை 1 முதல் அனைத்து அரசு அலுவலங்களும் செயல்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் ஜூலை 31 ஆம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நோய் பரவல் மீண்டும் அதிகரிக்கப்படாமல் இருக்க அடுத்த 10 நாட்களில் அனைத்து அரசு ஊழியர்களும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்