தற்போது அடுத்த மாதம் 2ம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
தற்போது தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். காரணம் தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் அதிகாரிகளும் அனைத்து பணிகளையும் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அடுத்த மாதம் 2ம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இதில் பல அம்சங்கள் பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வேளாண் சட்டங்கள் குறித்தும், அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்தும் ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதனை முன்னிட்டு நாளை மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் நாளை மாலை 4.30 மணியளவில் தொடங்கும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
இதில் அமைச்சர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் சட்ட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வினவும் கேள்விகளுக்கு கூறும் பதில்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம். மேலும் தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அதுகுறித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.