தக்காளி காய்ச்சல் நினைத்து பயப்பட வேண்டாம் – சுகாதார அமைச்சகம் அறிவிப்பு!

0

கேரளாவில் கடந்த சில நாட்களாக புதிதாக தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இதனை குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.

கேரளாவில் தக்காளி காய்ச்சல்:

உலகமே கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று வருத்தத்தில் உள்ள நிலையில் அண்டை நாடான கேரளாவில் புதிதாக தக்காளி காய்ச்சல் என்ற நோய் பரவி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அண்மையில் நடந்த செய்தி தொகுப்பில் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேட்டி கொடுத்திருந்தார்.

அவர் கூறியதாவது, யாரும் இந்த தக்காளி காய்ச்சலுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் இது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று மக்களுக்கு அறிவுரை அளித்துள்ளார். இந்த காய்ச்சல் ஒரு சில மாவட்டங்களில் பரவி வருகிறது. குறிப்பாக 4 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் பாதிப்படையச் செய்கிறது.

அதனால் இது குறித்து பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. ஏனென்றால் இந்த நோய் ஒரு மாவட்டத்தில் கூட பெரிய அளவில் பாதிப்புகளையும் உயிர் இழப்பும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோயின் மூலம் மூளை காய்ச்சல் வர அபாயம் இருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதை தடுக்க மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு நடக்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here