மதுரை விமான நிலையத்தில் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் உள்நாட்டு சேவை, வெளிநாட்டு சேவை என நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் இயங்கி வருகின்றனர். விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பொருட்களை பாதுகாக்கும் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் குறிப்பாக சந்தேக படும் விதத்தில் யாரேனும் இருந்தாலோ மற்றும் தீவிரவாதிகள் போன்றவர்களை புகுந்து விடாமல் தடுக்கும் பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுரையில் உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொண்ட ஆய்வாளர் துருவ குமார் ராய் தன் பணியை முடித்துவிட்டு பாதுகாப்புக்காக வைத்திருந்த 9 மில்லி மீட்டர் குண்டு கொண்ட துப்பாக்கியை ஆய்த கட்டிடத்தில் ஒப்படைக்கும் போது திடீரென கையில் இருந்த துப்பாக்கி வெடித்துள்ளது.
இதனை தொடர்ந்து வெடித்த சத்தத்தில் மக்கள் பயத்தில் ஓட தொடங்கினர். இந்த சூழ்நிலையில் யாருக்கும் எந்த ஆபத்து ஏற்படவில்லை .இதனால் பணியில் கவனம் செலுத்ததால் அந்த ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்தார் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்