கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் நகை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறன்றனர். மேலும் தற்போது இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம்:
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. மேலும் கொரோனா காலங்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இதனால் சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். கொரோனா காலங்களுக்கு பின்பு தங்கத்தின் விலை சிறிய அளவு குறைந்தது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாகவே தங்கத்தில் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்றது. இதானால் மக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் சோகத்தில் உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
#INDVSAUS சிட்னி டெஸ்ட் – இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்றா??
இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரு சவுரனுக்கு ரூ.352 உயர்ந்துள்ளது. மேலும் ஒரு சவுரன் தங்கம் ரூ.38,336க்கு இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரூ.43 உயர்ந்துள்ளது. தற்போது 1 கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,792க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிராம் வெள்ளி ரூ.73.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளியின் விலை 73,700கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிபிடத்தக்கது.