#INDVSAUS சிட்னி டெஸ்ட் – இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்றா??

0

தற்போது வரும் 7ம் தேதி அன்று சிட்னியில் வைத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வீரர்கள் பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரிசோதனையில் இந்தியா அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவர்க்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்ற தெரிவித்துள்ளார்கள்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்தியா அணி தற்போது டெஸ்ட் தொடர்களை பங்கேற்று வருகிறது. இதில் ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தது. நடந்து முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 3வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி நடைபெறும். இந்த டெஸ்ட் போட்டி சிட்னியில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது சிட்னியில் கொரோனா தொற்று பரவி வருவதால் டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது மருத்துவர்களின் அறிவுரையை கேட்ட பின் கிரிக்கெட் ஆஸ்திரேலியா சிட்னியில் வைத்து 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் தனது தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்ததால் இந்தியா அணியில் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். இந்நிலையில் இந்தியா அணி வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மங் கில், ப்ரித்வி ஷா, ரிஷாப் பண்ட மற்றும் நவதீப் சைனி ஆகிய 5 பெரும் கொரோனா தடுப்புமுறை விதிமுறைகளை மீறி வெளிய சென்றதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா பரவும் சூழலில் இந்த நிகழ்வு நடந்ததால் அனைவரையும் அதிர்ச்சி அடைந்தனர்.

‘இந்த வாரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி வெளியாகும்’ – சீரம் நிறுவனம் அறிவிப்பு!!

இதனை தொடர்ந்து அந்த 5 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தியா அணி வீரர்கள் மற்றும் இந்தியா அணி நிர்வாகிகள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் வீரர்கள் மாற்று நிர்வாகிகள் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படாது என்று தெரிகிறது. மேலும் இந்தியா அணி வீரர்கள் 3 வது டெஸ்ட் போட்டிக்காக இன்று மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here