தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், காரைக்கால் மற்றும் புதுசேரி பகுதிகளில் மிதமான மழை பெய்ய கூடும்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் நாளை கோயம்பத்தூர் மலை பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தர்மபுரி, கரூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, சிவகங்கை, மதுரை, தேனி,திண்டுக்கல் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கணவனின் தோளில் சாய்ந்தபடி கியூட்டாக போஸ் கொடுத்த நயன்., இணையத்தில் வைரலாகும் நியூ க்ளிக்!!