தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி தயாரிப்புக்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டு எல்லாம் கருகி போகின. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 3 பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இறந்த குடும்பத்திற்கு 3 லட்சம் நிதிஉதவியாக கொடுக்க அரசாணை வெளியீட்டு இருந்தார்.இந்நிலையில் நடந்த சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இறந்தவர்கள் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நிவாரணத் தொகையை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த 5 நாட்கள் கட்டாயம் விடுமுறை…, வெளியான முக்கிய தகவல்!!