தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பணபலன் கிடைக்க வாய்ப்பு? அகவிலைப்படி உயர்வு குறித்த அப்டேட்!!!