மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக விரைவில் உயர்த்த உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதோடு 18 மாத நிலுவை தொகையும் சேர்த்து வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் உயர்தர பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் வரை பணப்பலன் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் அடுத்தடுத்து பண்டிகை காலம் வர இருப்பதால், ஒரு கோடிக்கும் மேலான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.