அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் அறிக்கை!!

0

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்தும் மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை குறித்தும் சென்னை வானிலை மையம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வானிலை நிலவரம்:

அடுத்த 4 நாட்களுக்கு அதாவது 13.02.2021 முதல் வரும் 17.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வானம் வறண்ட நிலையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#GoBackModi ட்ரெண்டாகும் ஹாஷ்டாக் – மோடி வருகைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு!!

அதிகபட்ச வெப்ப நிலையாக 30 டிகிரி செல்சியசும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியாசையும் ஒட்டி இருக்கும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை. இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். எனவே மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here