ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
புல்வாமா
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கன் என்ற கிராமத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவத்தின் 55 ராஷ்டிரிய ரைபிள், சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் இணைந்து, இன்று அதிகாலை அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதிகள்
இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதற்கு பதிலடி குடுக்கும் விதமாக அந்த வீரர்கள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திற்கு சென்று முக்கிய தளபதிகள் உட்பட 3 பேரை சுட்டு கொன்றனர். மேலும் அப்பகுதியில் இ- சேவைகள் அனைத்தும் நிறுத்துவைக்கப்பட்டுள்ளது.
நேற்று ரஜோரி என்ற மாவட்டத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பட்டனர். தற்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |