ஊரடங்கு காரணமாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் மறுபுறம் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்றைய விலை நிலவரம்:
இந்தியாவில் மார்ச் 23ம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. அட்சயதிருதியை நாள் கூட கடைகள் திறக்க அனுமதி வழங்கபடவில்லை. இருப்பினும் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்நிலையில் ஏசி இல்லாத நகைகடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் வியாபாரம் தொடங்கி உள்ளது. சில நாட்களாக தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்த விலை இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து உள்ளது.
- ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) – ரூ. 4,468
- ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) – ரூ. 35,774
- ஒரு கிராம் வெள்ளியின் விலை – ரூ. 54.80
- ஒரு கிலோ வெள்ளியின் விலை – ரூ. 54,800
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |