‘உயிர் தான் முக்கியம்’ – பத்திரிக்கையாளர்களுக்கு அறிவுரை கூறிய முதல்வர்..!

0

லகமே கொரோனாவால் மிகவும் பாதிப்படைந்துள்ளது.கொரோனா என்னும் தொற்று நோய் ஒவ்வொரு நாடாகப் பரவி எல்லா துறையையும் தாக்கியுள்ளது,.இதன் வேகமும்  தாக்கம் குறையாமல் இன்னும் வேகமாக பரவி கொண்டுதான் இருக்கிறது. தமிழத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பத்திரிகையாளர்களை கவனமாகவும் முக கவசத்துடன் இருக்குமாறு முதல்வர் பழனிச்சாமி அறிவுரை கூறியுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை

தமிழகத்தின் மொத்த பாதிப்பில் சென்னையில் 50 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொத்து கொத்தாக மக்கள் பாதிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு வீச்சில் பணிகள் நடைபெறுகின்றன.  லாக்டவுன் அமலில் இருந்தாலும் ஒரு சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தா முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்கள் சிலர் முகக் கவசம் அணியாமல் இருப்பதைக் பார்த்தார்.

அவர்களிடம், ”அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். உயிர்தான் முக்கியம். உயிருக்கு பின்தான் தொழில் என்பதை தெரிந்துகொண்டு பணியாற்றுங்கள்,” என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து பத்திரிகையாளர்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை ஒவ்வொருவரும் மக்களும் கடைப்பிடிக்க வேண்டும்.”உயிர்தான் முக்கியம் முகக் கவசம் அணியுங்கள், என பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்கினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here