தமிழ்நாட்டில் TNPSC தேர்வாணையம் அறிவித்த குருப் 2, குருப் 2Aக்கான முதன்மை தேர்வு இன்று (பிப்ரவரி 25) நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் 186 தேர்வு மையங்களில் சுமார் 57,641 போட்டியாளர்கள் காலை 09.30 மணியளவில் தேர்வு எழுத இருந்தனர். ஆனால் சென்னை, மதுரை உட்பட சில தேர்வு மையங்களில் வினாத்தாளில் பதிவெண் மாறி இருந்ததால் தேர்வர்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களே கவனம்., விடுமுறை குறித்த புதிய நடைமுறைகள் வெளியீடு! முழு விபரம் உள்ளே!!
எனவே இதுகுறித்த குளறுபடிகளை அதிகாரிகள் சரிசெய்ய சிறிது கால தாமதம் ஆனது. இதனால் தேர்வர்களுக்கு பிற்பகல் 02.30 மணி அளவில் தேர்வு மறு வரைமுறை செய்யப்பட்டதாக தேர்வாணையம் தெரிவித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதைத்தொடர்ந்து மதியம் 02.30 மணி அளவில் தொடங்கி மாலை 05.30 மணி வரை தேர்வர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இதையடுத்து பல்வேறு குளறுபடிகள் தாண்டி குருப் 2 முதன்மை தேர்வு நிறைவு பெற்றது.