அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே தொடரும் – வானிலை மையம் தகவல்!!

0

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக வறண்ட வானிலேயே இருக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெப்பநிலை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வறண்ட வானிலேயே இருந்து வருகின்றது. இதனை அடுத்து, வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை அறிக்கையினை வழங்கியுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எப்படி கொழுகொழுனு இருக்கீங்க அஸ்வின்?? ட்ரெண்டாகும் அஸ்வின் கல்லூரி புகைப்படங்கள்!!

அதே போல் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழகத்தின் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக தான் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாக கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பதிவு

தமிழகத்தில் தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து வீச இருப்பதால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை சென்னை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை நான்கிலிருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயர கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு பின்பாக, ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளகுறிஞ்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட மூன்றிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயர கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த இடத்திலும் மழை பதிவாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here