இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில், மக்கள் அதிகம் கூடும் இடங்களை மையமாக கொண்டு பல பெண்கள் குழந்தையை வைத்து “பால் வாங்க காசு கொடுங்கள்” என பிச்சை எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு இரக்கப்பட்டு பலர், காசும் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு, பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்த விசாரித்த போது, குழந்தைகளை வாடகைக்கு வாங்கி தான் இந்த செயல்களில் பெண்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, ஆடி அமாவாசை தினமான இன்று திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குழந்தைகளை வைத்து 70க்கும் மேற்பட்ட பெண்கள் பிச்சை எடுத்துள்ளனர். இதனால், இவர்கள் மீது சந்தேகம் எழவே விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், ரூ. 500-க்கு பச்சிளம் குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது பிரியர்கள் கவனத்திற்கு.., வெளிநாட்டு மதுபான பிராண்டுகள் அதிகரிப்பு.., வெளியான முக்கிய தகவல்!!