அரசு போக்குவரத்து ஊழியர்கள் கட்சிகளுக்கு உதவக்கூடாது – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!!

0
tn transport

தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிகளுக்கும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் உதவக்கூடாது என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் உதவ தடை

சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசு பணியாளர்கள் ஈடுபடக்கூடாது என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் எத்தகைய உதவிகளும் செய்யக்கூடாது. அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடக்கூடாது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமந்தாவின் நடிப்பை பார்த்து கத்திய நயன்தாரா – படப்பிடிப்பில் நடந்த ஷாக்கிங் சம்பவம்!!

ஊழியர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் கட்சிகளின் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது. வாக்குச்சாவடி முகவர்களாக பணியில் ஈடுபடக்கூடாது. தேர்தல் பணியில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பவர்கள். அதனால் தேர்தல் விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு தேர்தல் விதி எண் 134ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here