பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?? கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!!

0
மாநிலத்தில் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்.13 வரை விடுமுறை - அரசு அதிரடி!!
மாநிலத்தில் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்.13 வரை விடுமுறை - அரசு அதிரடி!!

பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்களிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் 70 சதவீதம் பேர் பள்ளிகளை திறக்க அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முடக்கப்பட்டன. நடப்பு கல்வியாண்டு துவங்கி 8 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த அக்டோபர் மாதம் பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் தமிழக அரசு இந்த அரசாணையினை நிறுத்தி வைத்தது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அதன் பின்பு பெற்றோர்களின் கோரிக்கைக்கு இணைக்க கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டன. தற்போது கல்லூரிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டதால் பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டம் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் 70 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பெற்றோர்கள் இவ்வாறாக கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ளதால் தமிழக அரசு பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு விடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here