தமிழகத்தில் கனமழை எதிரொலியாக 28 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
விடுமுறை:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் ஏராளமான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(11.11.2022) – முழு விவரம் உள்ளே!!
மேலும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நாமக்கல், சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.