
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் சம வேலைக்கு சம உரிமை, பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. வாக்குறுதி அளித்து இருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
தற்போது திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆசிரியர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற நவ. 25 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் போராட்டம் டிசம்பர் 9 ஆம் தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மக்களே இப்பவே சார்ஜ் போட்டுக்கோங்க.., நாளை இந்த பகுதியில் Power Cut.., வெளியான முக்கிய அறிவிப்பு!!