தமிழக விவசாயிகளுக்கு மின்சாரம் அத்தியாவசிய தேவையாக மாறி வருவதை கருத்தில் கொண்டு, இலவச மின்சார சேவையை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் குறைந்தது அரை ஏக்கர் நிலம் (0.5 ஏக்கர் – 50 சென்ட்) வைத்திருப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும் என TANGEDCO அறிவுறுத்தியது. இதனால் பலரும் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது என கவலை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது TANGEDCO வின் வரையறை 05.08.2020 ஆம் தேதிக்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அதற்கு முன்னதாக விண்ணப்பித்த விவசாயிகளுக்கு நில வரைமுறை அவசியமில்லை என தெளிவுபடுத்தி உள்ளது. இதனால் 05.08.2020ஆம் தேதிக்கு முன்னதாக கிடப்பில் உள்ள சுமார் 4 லட்சம் விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலிக்கப்படும் என்பதால், பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பள்ளி மாணவர்களே.., வெள்ளிக்கிழமை விடுமுறைக்கு ரெடியா?? முக்கிய அறிவிப்பு!!