தமிழக அரசானது பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடுவதற்காக பொது விடுமுறைகளை அளித்து வருகிறது. மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களை மக்கள் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாட, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையும் அறிவித்து வருவது வழக்கம்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த வகையில், தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வரும் அக்டோபர் 27 ஆம் தேதி (நாளை) நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்காக, சேலம் மாவட்டத்திற்கு நாளை (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.