தமிழகத்தில் ஏழை எளியோர்களை ஊக்குவிக்கும் வகையில் கூட்டுறவு நிறுவனங்கள் பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சிறு வணிக கடன், வீட்டுக் கடன், சுய உதவி குழு கடன், தொழில் கடன் உள்ளிட்ட பண்ணை சாரா கடன்களை பெற்றவர்களிடம் நிலுவையில் உள்ள கடன்களை திரும்ப பெற, சிறப்பு கடன் தீர்வு திட்டத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி உள்ளார்.
இதன்மூலம் கடந்த, 2022 டிச., 31 வரை கடன்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கு, கூடுதல் வட்டி, அபராத வட்டி உட்பட இதர செலவினங்களை முழுவதும் தள்ளுபடி செய்துள்ளனர். இந்த சலுகையை பெற நிலுவை தொகையில் 25 சதவீத தொகையை 3 மாதத்திற்குள்ளும், மீதமுள்ள 75 சதவீத தொகையை அடுத்த ஆறு மாதங்களுக்குள் 6 தவணையாகவும் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். எனவே பயனாளிகள் விரைந்து கூட்டுறவு நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம்.
Enewz Tamil WhatsApp Channel
IND vs SA 2023: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்.. வெளியான முக்கிய அப்டேட்.!