ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரண தொகை?? 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்…, வெளியான முக்கிய தகவல்!!

0
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரண தொகை?? 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்..., வெளியான முக்கிய தகவல்!!
தமிழக அரசானது, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 6000 வழங்குவதாக அறிவித்திருந்தது. இதன்படி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த நிர்வாணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ரேஷன் அட்டை இல்லாத சுமார் 5.5 லட்சம் பேர் நிவாரணத் தொகை ரூ. 6000 கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதில் குறிப்பாக, சென்னையில் மட்டும் சுமார் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரத்தில் 29 ஆயிரம் பேரும், திருவள்ளூரில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டில் 14 ஆயிரம் பேரும் நிவாரணத் தொகை பெற வேண்டி விண்ணப்பித்துள்ளனர் என அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here