தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழக்கத்திற்கு மாறாக அதிக நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அண்மையில் தெரிவித்தது. இந்த நிலையில் நாளை (ஆகஸ்ட் 5) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதேபோல் மற்ற தொடக்க நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்புகளை மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவிக்கவும் கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் மாணவர்களுக்கு “இலவச பொது மருத்துவ முகாம்”., தலைமை ஆசிரியர் ஏற்பாடு!!!