நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு, டிரஸ் உள்ளிட்ட வியாபாரிகளின் விற்பனை அமோகமாக நடைபெறும். அந்த வகையில் இன்னும் ஒரு சில தினங்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால், தமிழகத்தில் ஏராளமானோர் பட்டாசு கடை வைக்க அனுமதி கோரி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி முன்னதாக கான்கிரீட் மேற்கூரை உள்ள கட்டடத்திற்கு மட்டும் தான் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளித்து வந்தனர். தற்போது பெரும்பாலான கடைகள் “தகர சீட்” போடப்பட்ட இடங்களாக இருப்பதால், பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
கொட்டித்தீர்க்கும் வடகிழக்கு பருவமழை.., குற்றாலத்தில் குளிக்க தடை – வனத்துறையினர் அறிவிப்பு!!