விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது Ticket To Finale டாஸ்க் போயிக்கொண்டுள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன வாரத்தில் ஆஜித் வெளியேறினார். இதில் திடுக்கிடும் சம்பவம் என்றால் ரம்யா கடைசியாக காப்பாற்றப்பட்டது தான். ஏற்கனவே ரம்யாவின் தம்பி இந்த வாரத்தில் நீ வெளியேறினால் கண்டிப்பாக அது உன் தப்பு கிடையாது என்று சொல்லி ரம்யாவை குழப்பி தான் விட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் ஆரிக்கு எதிராகவே இருந்து வருகின்றனர். ஆரி பாலா இடையே நடந்த சண்டையில் பிக் பாஸ் ரசிகர்கள் அனைவருமே மிரண்டு போயிருந்தனர். ஆனால் நேற்றைய எபிசோடில் ஆரியும் பாலாவும் சமாதானமும் ஆகினர். இது பார்ப்பதற்கு சற்று நன்றாக இருந்தது. ஆனால் இரண்டு பெரும் எதிர் துருவங்களை போல சண்டையும் ஓய்வது போல தெரியவில்லை.
ஜஸ்பே மூலம் கிரெடிட் கார்டு தகவல்கள் திருட்டு – சைபர் கிரைம் எச்சரிக்கை!!
இன்றைக்கு வெளியான ப்ரோமோவில் Ticket To Finale வில் பிக் பாஸ் மறுபடியும் ஒரு டாஸ்கை கொடுத்துள்ளது. அதாவது நடுவில் ஒரு பஸ்சர் வைக்கப்பட்டிருக்கும் மேலும் ஒரு பாடலின் மியூசிக் ஒளிபரப்பாகும் அந்த பாடலை கண்டுபிடித்தவர்கள் வேகமாக அந்த பஸரை அழுத்த வேண்டும்.
இதனாலும் வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. இத்தனை நாள் அமைதியாகவே இருந்த ஷிவானி இப்பொழுது விளையாட ஆரம்பித்து விட்டார். நேற்று கொடுக்க பட்ட டாஸ்கை வைத்து பார்க்கும்போது ரியோ தான் முன்னிலையில் உள்ளார். பாலாஜி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஆனால் இன்றைய கேமை வைத்து பார்க்கும்போது ஒவ்வொரு நாளைக்கும் போட்டியாளர்களின் வேகத்தை பொறுத்து ஸ்கோர் மாறுகிறது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்பின் படி ரியோ அல்லது பாலாஜி இந்த இருவரில் யாரேனும் ஒருவர் ஜெயிக்க வாய்ப்புள்ளது.