இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்தியாவின் அறிவியல் புதுமைக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது குறித்து பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி:
உலகநாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பலவும் போட்டி போட்டுகொண்டு தடுப்பூசியை கண்டுபிடித்துவருகின்றனர். பல உலக நாடுகளில் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்த வகையில் இந்தியாவில் பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்திருந்தது. பின்பு மத்திய அரசும் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருந்தது. கோவிஷீல்டு என்ற இந்த தடுப்பூசியை புனே நகரில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க உரிமம் பெற்றுள்ளது.
பில்கேட்ஸ் வாழ்த்து
இந்தியா முழுவதும் கடந்த ஞாயிற்று கிழமை அன்று ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்துக்கும், சீரம் இன்ஸ்டிடியூட் ன் கோவிஷீல்டுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளுமே 100% பாதுகாப்பானவைகள் என்று மத்திய மருந்து துறை உறுதியளித்துள்ளது.
சென்னையில் தொடரும் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!
இந்நிலையில் இந்த தகவல் குறித்து அமெரிக்காவின் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் இந்தியாவில் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் அறிவியல் புதுமைக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது பெருமையளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.