தெலுங்கில் உருவான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆன ஆதித்யா வர்மா படத்தில் மூலம் அறிமுகமானவர் தான் துருவ் விக்ரம். தனது முதல் படத்திலேயே பெரிய அளவிற்கு பெயரும், புகழும் பெற்றிருந்தார். தற்போது பாலா இயக்கத்தில் உருவான வர்மா திரைப்படம் அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது.
வர்மா
தமிழில் முன்னணி நடிகரான விக்ரம் அவர்களின் மகன் தான் துருவ். இவர் நடிப்பில் உருவாகிய படம் தான் வர்மா. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடையும் தருவாயில் இயக்குனர் பாலா மற்றும் விக்ரம் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
இதனால் படத்தை நிறுத்தி வைத்தனர். ஏனெனில் விக்ரமிற்கு இந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதனால் இயக்குனர் பாலா அவர்கள் இந்த படத்தை விக்ரமிடம் கொடுத்து விட்டு விலகி விட்டார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு தான் வேறு ஒரு இயக்குனரை வைத்து விக்ரம் தெலுங்கில் நல்ல வசூலை பெற்றுத்தந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய ‘ஆதித்யா வர்மா’ படத்தை தொடங்கினார். இந்த திரைப்படம் நினைத்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.
அனால் துருவ் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனது முதல் படத்திலேயே பிரபலமடைந்தார். பெண் ரசிகர்கள் அதிகமானார்கள். ஆனால் இந்த படத்திற்கு வெற்றி கிடைக்காததால் துருவ் கேரியர் கவலைக்கிடமானது.
இதற்கிடையில் பாலா இயக்கிய வர்மா படத்தினை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 6 இல் சிம்ப்ளி சவுத் என்ற நிறுவனத்தின் OTT இல் வர்மா திரைப்படம் வெளியாக உள்ளது.