தமிழகத்தில் தொடர்ந்து தங்க விலை உயர்வது அனைத்து தரப்பு மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நேற்று போல் இன்றும் தங்க விலை சற்று உயர்ந்துள்ளது.
தொடர் ஏற்றம்:
கடந்த மார்ச் மாதம் பொது முடக்கம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பங்குச்சந்தை என்றும் காணாத அளவு சரிந்தது. இந்த அதிரடி சரிவால் முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்து பாதுகாப்பான முதலீட்டில் தங்களது பணத்தை சேமிக்க நினைத்தனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அதனால், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பு என்று கருதி தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இது எல்லா தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும், கடந்த சில வாரங்களாக விலை நிலவரம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்தது. இன்றும் தங்க விலை ஏற்றம் கண்டுள்ளது.
இன்றைய நிலவரம்:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து 38,520 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் கிராம் ஒன்றிற்கு 22 ரூபாய் அதிகரித்து 4,837 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – தமிழக அரசு அறிவிப்பு!!
ஆபரண தங்கம் இப்படியாக இருக்க தூய தங்கம் (24 கேரட்) 22 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,078 என்றும் 8 கிராம் 40,624 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் உயர்ந்து 64.20 என்று விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 64,200 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விலை ஏற்றதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.