நில விற்பனையில் 7 கோடி மோசடி., கௌதமி புகார்., கையும் களவுமாய் போலீசில் சிக்கிய முக்கிய நபர்!!

0

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கௌதமி. எக்கசக்க படங்களில் நடித்து அசத்தியுள்ள இவர் தற்போது ”துப்பறிவாளன் 2” படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் உள்ள இவரது 8.16 ஏக்கர் நிலத்தை 2 புரோக்கர்கள் மூலம் ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் 2021 ஆம் ஆண்டு வருமான வரி துறையில் இருந்து 11,17,38,907 கோடிக்கு விற்பனை செய்த நிலத்துக்கு வரி கட்டவில்லை என நோட்டீஸ் வந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை நகல் எடுத்து பார்த்ததில் அந்த 2 புரோக்கர்களும் நில விற்பனையில் 7 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் நிலத்தை விற்றதில் மோசடி செய்தவர்கள் மீது கௌதமி புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் நில விற்பனையில் மோசடி செய்த புரோக்கர் பலராமன் ( தொழிலதிபர்) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here