தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சக்கரவர்த்தியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். ஆரம்பத்தில் பல பிளாப் படங்களை கொடுத்திருந்தாலும், தற்போது வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூலை குவிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அவரின் சினிமா கேரியரில் ஃபேமிலி ஆடியன்ஸை அதிகமாக கவர்ந்த திரைப்படம் என்றால் அது பேரரசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திருப்பாச்சி திரைப்படம் தான்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்த நடிகை மல்லிகாவுக்கு கணவராக நடித்தவர் தான் நடிகர் சாய் பாபா. இவர் சினிமாவில் கொஞ்சம் திரைப்படங்கள் நடித்திருந்தாலும், திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு மச்சானாக நடித்து பிச்சு உதறிருப்பார். அப்படத்தில் நடிப்பை பார்த்து தான் பேரரசு அடுத்து இயக்கிய சிவகாசி படத்திலும் சாய்பாபாவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
மின்வாரிய துறையில் 10,200 காலி பணியிடங்கள்.., அரசு தாமதிப்பது ஏன்??
ஆனால் அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காத இவர் கடைசியாக விஷால் நடித்த பூஜை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதையடுத்து எந்த பட வாய்ப்புகள் அவருக்கு வராத நிலையில், தனியாக பிசினஸ் ஒன்றை நடத்தி வருகிறார். இருந்தாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வம் குறையாததால் தொடர்ந்து பட வாய்ப்பு கேட்டு அலைந்து வருகிறாராம். இவரின் இந்த நிலைமை பார்த்து ரசிகர்கள் விஜய்யின் மச்சானுக்கா இந்த நிலைமை என்று பீல் செய்து வருகிறார்கள்.