தமிழ் சினிமாவில் ஜாதிகளை வைத்து படம் எடுக்கும் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். தற்போது இவர் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் வருகிற ஜூன் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த விழாவில் உலக நாயகன், சிவகார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது பேசிய மாரி செல்வராஜ் தேவர் மகன் மாதிரி ஒரு ஜாதி படத்தை பார்த்ததில்லை என்று உலகநாயகனை விமர்சிக்கும் படி பேசியிருந்தார். அவர் பேசியதை கேட்ட கமல் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வெளுத்து வாங்கி வருகிறார்.
தயவு செஞ்சு இதை செய்யாதீங்க.., போதை பொருள் கெத்தான விஷயம் இல்ல.., நடிகர் கார்த்திக் அட்வைஸ்!!
இந்நிலையில் தேவர் மகன் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மாரி செல்வராஜ் பேசியது குறித்து பேசியுள்ளார். அதாவது, தேவர் மகன் திரைப்படம் தவறான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட வில்லை என்று மாரி செல்வராஜ் பதிலடி கொடுக்கும் விதமாக தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் பேசியுள்ளார்.